இந்திரா காந்தி வாரிசு அனுபவிக்கும் 2021 எமர்ஜென்சி நிலை

காலம் விசித்திரமானது..
இந்திரா காந்தி உருவாக்கிய எமர்ஜென்சியில் நிலையை எதிர்த்து பிஜேபி ஜனதா கட்சியாக போராடியதாக எண்பதுகளில் பிரச்சாரம்…
இன்று அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல காங்கிரஸ் வாரிசு இந்திரா காந்தி பேத்தி திரு பிரியங் கா காந்தி 24 மணி நேரம் வீட்டுச் சிறையில்…
காங்கிரஸ் ஒழுங்காக இருந்திருந்தால் பிஜேபி என்ற கட்சி என்று இருந்திருக்காது..


பிஜேபி என்று ஒழுங்காக இல்லாததால் இப்போதைய கால சூழ்நிலையில் நாளையோ அடக்குமுறையை எதிர்த்து வேறு ஒரு கட்சி உதயமாகும்..
அந்தக் கட்சியும் கழுதை தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பு ஆக மாறிய கதையாக ஜனநாயக மறுப்பு போக்கில் ஈடுபடும்..
சுரண்டல் புரையோடிப்போன
சமூகத்தில் ஜனநாயக மறுப்பு தொடர்கதையாக தான் இருக்கப் போகிறது…
காங்கிரஸ் பிஜேபி அல்லாத புதுக்கட்சி உதயமாக.. அதுவும் ஜனநாயக மறுப்பில் ஈடுபட.. மக்களோடு மக்களாக பார்க்கப்போகிறோம்.
சுரண்டலற்ற சமுதாயத்தை நோக்கி கனவு காண்போம்…
Kasirajan A
அக்டோபர் 5 2021

Leave a comment